
நானும் பதிவு எழுதலாம் என்று "புலிய பாத்து சூடு" போட்ட கதையா ஜாக்கிசேகர் மற்றும் பலரை பார்த்து இந்த ப்ளோக ஆரம்பித்தேன். ஆனா சூடு போட்டுகினது தான் மிச்சம்.ப்ளாக் ஆரம்பித்த உடனே நான் போட்ட முதல் பதிவோட சரி வேற எதையும் புடுங்க முடியல.
அப்பறம் பழையபடி எல்லா ப்லோகயும் மேய ஆரம்பித்து கடைசில நான் ப்ளாக் அரம்பிததேயே மறந்தாச்சி.
ஆனால் எனக்கு ப்ளாக் அறிமுகம் ஆனது இப்படி தான்,
நான் கொஞ்சம் ஆங்கில படம் பார்பதில் ஆர்வம் உள்ளவன், அப்படி தான் ஒருமுறை ஆபீஸ்ல போன வருடம் வெடியா ஒகர்ந்திருந்த போது ஹாலிவுட் பாலா வின் பதிவை படிக்கச் நேர்ந்தது.அந்த ப்ளாக் முலமாக தான் நான் பல பதிவர்களின் பதிவுகளை படிக்க நேர்ந்தது.
என்னை ரொம்ப இம்ப்ரெஸ் செய்தவர் திரு.ஜாக்கிசேகர். அவர் பதிவுகள் தான் காரணம், அதில் உள்ள எளிமை. மேலும் தருமி அய்யா அவர்களின் பல பதிவுகள் மதங்களின் உண்மை நிலையை காட்டின.
மேலும் இந்த பதிவு உலகத்தில் என்னை சங்கடபடுத்திய ஒரு விஷயம் என்னன்னா சில மாதங்களுக்கு முன்பு தோன்றிய சில கசப்பான விஷயம் தான்.இந்த பதிவு உலகத்தில் கூட சாதி, மத, அரசியல் சண்டைகள் உருவானதுதான்.
இப்போ ரொம்பநாள் கழிச்சி ப்ளாக் ஞாபகம் வந்த உடன் என்ன எழுதறதுன்னு தெரியல அதனால, பேசாம நமக்கு ப்ளாக் எப்படி அறிமுகம் ஆச்சின்னு எழுதலாம்னு , என்னோட ரெண்டாவது பதிவ போடுகிறேன்.
இந்த பதிவு எப்பவும் போல நேர்த்தியாக இருக்காது,என்ன இப்பதானே ஆரம்பிச்சுருக்கேன். போக போக சரி பண்ணிடலாம்னு நம்பிக்கை இருக்கு.